×

கலெக்டர் தகவல் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங்

புதுக்கோட்டை, ஜூன் 12: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் 14ம் தேதி நடக்கிறது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான கந்தர்வக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு பட்டய படிப்பிற்கான 2-ம் கட்ட கலந்தாய்விற்காக தற்போது விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. நேரடி இரண்டாமாண்டு துறை வாரியாக காலியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) கடைசி நாளாகும்.

மேலும் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு அமைப்பியல் துறையில் 6 இடமும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் 1 இடமும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் 7 இடமும், கணினி அறிவியல் துறையில் 19 இடமும் காலியாக உள்ளது. எந்திரவியல் துறையின் இடங்கள் பூர்த்தியாகி விட்டன. இதேபோல முதலாமாண்டு துறை வாரியாக காலியிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் வருகிற 28ம் தேதி கடைசி நாளாகும். முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 29ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான காலியிடங்கள் அமைப்பியல் துறையில் 27 இடமும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் 11 இடமும், கணினி அறிவியல் துறையில் 43 இடமும் காலியாக உள்ளது. எந்திரவியல் துறை மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இடங்கள் பூர்த்தியாகி விட்டன. மேலும் விபரங்களுக்கு கந்தர்வகோட்டை புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Polytechnic College ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையமான அரசு...