×

அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை

புதுக்கோட்டை, ஜூன் 12: அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கூறினார். புதுக்கோட்டையில் அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவில் நிலவும் ஒற்றை தலைமை பிரச்னையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விட்டது. எந்தக் கட்சியாக இருந்தாலும் அதற்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் சிறந்தது. அப்போதுதான் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். இந்த ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கிடையாது. ஆனால் தானாகவே இந்த ஆட்சி கலையும் சூழல் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இன்னும் ஒன்றரை வருஷம் நீடிக்கும் இந்த ஆட்சியால் அதிமுகவிற்கு கெட்ட பெயரும் ஊழலும்தான் அதிகரிக்கும். 2021ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவு இடங்களை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசியதில் தவறில்லை அதிக இடங்களில் திமுக போட்டியிட வேண்டும் என்று அவரது எண்ணத்தை அவர் பிரதிபலித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையில் மூலமாகத்தான் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார். நடிகர் சங்கத்தில் நானும் ஆயுட்கால உறுப்பினர். தற்போது நடைபெறும் தேர்தல் ஆரோக்கியமான தேர்தலாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். ஹைட்ரோகார்பன் நீட்தேர்வு திட்டமாக இருந்தாலும் சரி மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரும்போது அதனை எதிர்த்து திமுக காங்கிரஸ் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள். திமுக, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள், அதோடு மக்கள் பிரச்னைகளை பேசுவார்கள். தற்போது தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதால் மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தமிழக அரசு அதை பெற்று குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருநாவுக்கரசர் பேட்டி காலையில் குளிர்ந்த காற்றும்,
மதியம் முதல் மாலை வரை அனல் காற்றும் வீசி வருகின்றது. மழை பெய்யாததால் விவசாயிகள் உழவு பணி செய்ய முடியாமல் காத்துக் கிடக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் விவசாயம் செய்வதற்கு வசதியாக அரசு நுண்ணீர் பாசனத்திட்டம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளையும், வேளாண் கருவிகள் இடுபொருட்களையும் வழங்கி வருகிறது.

Tags : DMK ,AIADMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...