×

குடும்ப தகராறில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

பாடாலூர், ஜூன் 12: பாடாலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். ஆலத்தூர் தாலுகா சீராநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி அனிதா (24). இவர் குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் மாலை விவசாய நிலத்துக்கு அடிப்பதற்காக வைத்திருந்த களைக்கொல்லி விஷத்தை குடித்தார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த அனிதாவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து குன்னம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்டதி வருகின்றனர்.

Tags :
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...