×

திருட்டு மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்

பாபநாசம், ஜூன் 12: பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுமுருட்டி உள்ளிட்ட ஆறுகளில் மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோபாலபுரம் பகுதியில் அய்யம்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Theft ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...