×

பாபநாசத்தில் நடந்த ஜமாபந்தியில் 25 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

பாபநாசம், ஜூன் 12: பாபநாசத்தில் நடந்த அம்மாப்பேட்டை சரகத்துக்கான ஜமாபந்தியில் 25 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் முழுவதும் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடந்து வருகிறது. இதில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதேபோல் பாபநாசம் வட்டாரத்திலும் ஜமாபந்தி நடந்து வருகிறது. அதன்படி பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அம்மாப்பேட்டை சரகத்துக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கும்பகோணம் ஆர்டிஓ வீராசாமி தலைமை வகித்தார். இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 45 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். பாபநாசம் தாசில்தார் கண்ணன் மற்றும் சரக ஆர்ஐ, கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். நிறைவு நாளான நேற்று 25 பேருக்கு பட்டா மாற்ற ஆணை, 24 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை கும்பகோணம் ஆர்டிஓ வீராசாமி வழங்கினார். குடந்தை ஆர்டிஓ வழங்கினார்

Tags : Patta ,Papanasam ,Jaffna ,
× RELATED நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை வழியாக...