×

அரசு பஸ் மோதி விவசாயி படுகாயம்

ரிஷிவந்தியம், ஜூன் 12: ரிஷிவந்தியம் அருகே முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (70). விவசாயி. இவர் தனது விவசாய நிலத்திற்கு பாசார் தார் சாலையில் நடந்து சென்றார். அப்போது அதே திசையில் வந்த அரசு பேருந்து மோதி படுகாயமடைந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவரது மகன் மாரிமுத்து (50) கொடுத்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் அரசு டவுன் பஸ் ஓட்டுனர் கார்த்திக் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Tags : Government bus collision farmer ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை