×

பண்ருட்டி பஸ் நிலையத்தில் நிழற்குடை, குடிநீர் இன்றி பயணிகள் அவதி

பண்ருட்டி, ஜூன் 12:  பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இதில் கடலூர், விழுப்புரம், நெய்வேலி ஆகிய மார்க்கங்களில் செல்ல வழித்தடங்கள் உள்ளன. பயணிகள் பேருந்து நிலையத்தில் இறங்குவதற்காக எந்தவொரு நிழற்குடையும் அமைக்கப்படாததால் வெயிலில் நின்று செல்லக்கூடிய அவலநிலை உள்ளது. தற்போது வெயில் கடுமையாக உள்ளதால் பயணிகள் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு, குடிநீர்கூட இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.  குறிப்பாக கடலூர் மார்க்கம் செல்லும் பகுதியில் நெருப்பில் நிற்கும் அளவிற்கு வெயில் அடிப்பதால் நிற்க கூட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  நகராட்சி சார்பில் தண்ணீர் வசதி செய்யாத காரணத்தால் ஏழை எளிய பயணிகள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர். பலமுறை எடுத்து கூறியும் நகராட்சி குடிநீர் விஷயத்தில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இனியாவது நிழற்குடை, அத்தியாவசிய குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Passenger bus stand ,bus station ,Panruti ,passengers ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்