×

ரயில்வே கேட் மேனை தாக்கிய ஒருவர் கைது: இருவருக்கு வலை

சிதம்பரம், ஜூன் 12:  சிதம்பரம் அருகே உள்ள ஆலப்பாக்கம் சீனுவாசபுரம் ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் செல்லப்பன் மகன் பாபு(34). இவர் ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தார். விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்ததால் கேட்டை பாபு மூடி இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அழகேசன் என்பவர் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு கேட் கீப்பர் பாபுவை ஏன் ரயில் வருவதற்குள் கேட்டை மூடினாய் என கேட்டு ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக செல்போன் தகவலின் பேரில் அழகேசன் சகோதரர் பூண்டியாங்குப்பம் முருகன் கோயில் தெருவை சேர்ந்த சண்முகவேல் மற்றும் நண்பர்கள் மது போதையில் வந்து பாபுவை திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பாபு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுக்குறித்து புகாரின் பேரில் சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து சண்முகவேல்(36) என்பவரை கைது செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த சிவானந்தம், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது