சாத்தான்குளம், ஜூன் 12: சாத்தான்குளம் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.700 அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு பயன்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிளாஸ்டிக் கேரி பேக், டீகப், மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பது மற்றும் விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் செயல் அலுவலர் முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.