திருச்செந்தூர், ஜூன் 12: தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் திருச்செந்தூரில் சுதந்திர தின நினைவு இரும்பு ஆர்ச் புதுப்பிக்கும் பணிகள் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். அன்னம் கன்ஸ்ட்ரக்ஷன் சந்திரசேகர் முன்னிலை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். பூஜையை மாவட்ட ஆலோசகர் நெல்லையம்மாள் செய்தார். மாநில ஆலோசகர் அந்தோணிஜூலியட், நிலவள வங்கி தலைவர் விஜயராகவன், நகர செயலாளர் அருணாசலம், மாவட்ட சட்ட ஆலோசகர் வக்கீல் சாத்ராக், வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டிஎன்இபி சுப்பையா நன்றி கூறினார்.