×

கோவில்பட்டி அருகே முதியவர் மர்மச்சாவு

கோவில்பட்டி, ஜூன் 12: கோவில்பட்டி அருகே தாமஸ் நகரில் மர்மமான முறையில் இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்து தாமஸ் நகரை சேர்ந்தவர் கதிரேசன் (70). உப்பு வியாபாரம் செய்து வந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மனைவி, மகன் சுரேஷ் குடும்பத்தினர் சண்முகா நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் கதிரேசன் தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன் சுரேஷ் கிழக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், தனது தந்தையில் தலையில் காயம் இருப்பதால் அவரசு சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!