×

தூத்துக்குடியில் தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய பெண் உள்ளிட்ட மூவர் கைது

தூத்துக்குடி, ஜூன் 12:தூத்துக்குடியில் தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் தாசன் (38). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கேசவன். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் குரோட்டன்ஸ் செடியின் தொட்டியை உடைத்தது தொடர்பாக தாசன் வீட்டிற்கும் கேசவனின் வீட்டாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த கேசவனின் மனைவி முத்துலதா, அவரது உறவினர்கள் பிரசன்னா (30), செல்வம் (24) உட்பட 4 பேர் சேர்ந்து தாசனை பீர் பாட்டிலால் தாக்கியதுடன், அவரது வீட்டுக்குள் சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த தாசன்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துலதா, பிரசன்னா, செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பாஸ்கர் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...