×

கழிவுநீர் லாரி மோதி தனியார் சூபர்வைசர் பலி

வேளச்சேரி, ஜூன் 12: கழிவுநீர் லாரி மோதி தனியார் நிறுவன சூபர்வைசர் பரிதாபமாக இறந்தார். வேளச்சேரி அடுத்த நன்மங்கலம், நேரு நகர், 1வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (50). அதே பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் சூபர்வைசராக வேலை செய்தார். இவரது மனைவி எலிசபெத். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

தற்போது துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீதர், தனது பைக்கில் துரைப்பாக்கம் புறப்பட்டாட்டார். எஸ். கொளத்தூர் அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கழிவுநீர் லாரி, பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட தர், அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : suicide bomber ,
× RELATED குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3...