×

செம்மரக்கடத்தல் வழக்கில் தர்மபுரியை சேர்ந்த 2 பேருக்கு ஓராண்டு சிறை

சித்தூர், ஜூன் 12: செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைதான தர்மபுரியை சேர்ந்த 2 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த முருக்கம்பட்டு வனப்பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 4ம்தேதி தாலுகா போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வேனில் செம்மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் இருவரும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு, பெரியசாமி என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பிஎஸ்ஜே நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்றுமுன்தினம் வழக்கை நீதிபதி சூரியநாராயணமூர்த்தி விசாரித்து பிரபு, பெரியசாமி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ₹6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : jail ,Dharmapuri ,
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை