×

கால்நடைகளுக்கு சிறந்த பசுந்தீவனம் சேதுபாவாசத்திரம் அருகே தீவிபத்தில் 4 வீடுகள் சாம்பல்

சேதுபாவாசத்திரம், ஜூன் 11: சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 4 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் வீடுகளில் இருந்து நகை, பணம், உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது. சேதுபாவாசத்திரம் அடுத்த செந்தலைவயல் கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு சாகுல் ஹமீது (28) என்பவரின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென அருகில் உள்ள ராவுத்தர் (30) என்பவரின் ஓட்டு வீட்டுக்கு பரவியது. இதில் அவரது வீட்டில் இருந்த சிலிண்டர் தீப்பிடித்து வெடித்து சிதறியது. அங்கிருந்து கிளம்பிய தீப்பொறி பட்டு அவரது சகோதரர் கபூர் (26) மற்றும் சிக்கந்தர் என்பவரின் கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கந்தரின் வாய்பேச இயலாத மனைவி சாயிராபேகத்தை அக்கம்பக்கத்தினர் காயமின்றி மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் கோவிந்தராஜன் மற்றும் வீரர்கள் ரஜினி, விக்னேஷ் ஆகியோர் விரைந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீவிபத்தில் 4 வீடுகளில் இருந்த 15 பவுன் நகை, ரொக்க பணம் ரூ.1.08 லட்சம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதைதொடர்ந்து பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி உத்தரவின்பேரில் அடைக்கத்தேவன் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், கிராம உதவியாளர்கள் பரஞ்சோதி, தங்கவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடுகளை இழந்த 4 குடும்பத்தினரையும் அருகில் உள்ள பள்ளி கட்டிடத்தில் தங்க வைத்துள்ளனர்.

Tags : houses ,foothills ,Chettupadavatri ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...