×

கடை முன் நிறுத்திய மொபட் திருட்டு

தஞ்சை, ஜூன் 11:
தஞ்சை அருகே கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை தொப்புள் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (49). இவர் பைக்குகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது கடையில் நிறுத்தி வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மொபட் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவி–்ல்லை. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு மையத்தில் செல்போன் மாயம்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் கற்பகநாயகி (27). இவர் எரவாஞ்சேரி புதுக்குடியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கற்பகநாயகி, ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு தேர்வை கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் எழுதினார். அப்போது ஹால்டிக்கெட், ஐடி கார்டு, பேனாவை மட்டும் எடுத்துவர வேண்டும், மீதமுள்ள பொருட்களை பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டுமென தேர்வுக்கூட அதிகாரிகள் கூறினர். இதையடுத்து கற்பகநாயகி ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வாட்ச்சை பாதுகாப்பு அறையில் வைத்து விட்டு தேர்வெழுதினார். பின்னர் வந்து பார்த்தபோது செல்போன் மற்றும் வாட்ச் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் கற்பகநாயகி புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : theft ,shop ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...