×

சங்கராபுரம் அருகே தீக்குளித்த இளம்பெண் சாவு

சங்கராபுரம், ஜூன் 11: சங்கராபுரம் அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகள் தரணி(18). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது, வீட்டு வேலையை செய்யவில்லை என இவரது தாய் வசந்தா திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் வசந்தா, சங்கராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags : Sankarapuram ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்