×

அரசு பேருந்தை சேதப்படுத்திய வாலிபர்கள் கைது

விழுப்புரம், ஜூன் 11: விழுப்புரம் செஞ்சி ரோட்டை சேர்ந்த அசேன்(21), வண்டிமேட்டைச் சேர்ந்த கிருஷ்ணராஜ்(20) ஆகிய இருவரும் பைக்கில் விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது தீயணைப்பு நிலைய அலுவலக பகுதியில் வந்தபோது சென்னையிலிருந்து வந்த அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது டிரைவர் ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அரசு பேருந்தை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் டிரைவர் வெங்கடேசன் என்பவரை திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக வெங்கடேசன் விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Detainees ,
× RELATED பயிற்சி முடித்துள்ள காவலர்கள்...