×

மணல் சரிந்து கொத்தனார் சாவு

பண்ருட்டி, ஜூன் 11: பண்ருட்டி அருகே பூங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (37). கொத்தனார். இவர் அங்குள்ள ஏரியில் அரசு அனுமதியின்றி சாக்கு மூட்டையில் திருட்டுத்தனமாக மணல் எடுத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஏரியில் மீண்டும் மணல் எடுத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்தது. இதில் மண்ணில் புதைந்து உயிருக்கு போராடினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...