×

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

சிதம்பரம், ஜூன் 11: சிதம்பரம் அருகே நீதிக்குடி ராயர் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் மகன் கார்த்திகேயன் (21). நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் கார்த்திகேயனும், அவரது நண்பர் சிலம்பரசனும் மீதிக்குடி சுடுகாடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அண்ணாமலை நகர் வடக்கிருப்பு பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் சாமிநாதன் (33) என்பவர் கையில் கத்தியுடன் கார்த்திகேயனை வழிமறித்தார். அவரிடம், ஏற்கனவே உன் அண்ணனிடம் பணம் கேட்டு அவர் தராததால் அவரது காரை கொளுத்தினேன். நீயாவது பணத்தை கொடுத்துவிடு என்று கூறியதுடன் கத்தியை காட்டி வெட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டி கார்த்திகேயன் சட்டைப்பாக்கெட்டில் இருந்த 700 ரூபாயை பறித்துள்ளார். பின்னர் சாமிநாதன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து கார்த்திகேயன் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சாமிநாதனை கைது செய்தனர்.

Tags : jailor ,
× RELATED ‘ஜெய்லர் 2’ உண்டா? தனது பிறந்தநாளில் பதிலளித்த ஜெய்லர் மகன்!