×

முதியவர் தற்கொலை

புவனகிரி, ஜூன் 11: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பால்வார்த்துண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன்(53). இவரது மகளுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கறி விருந்து நடந்துள்ளது. அன்று சுப்ரமணியன் மது அருந்தியதாக தெரிகிறது. இதை இவரது வீட்டிலிருந்தவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுப்ரமணியன் நேற்று முன்தினம் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மகன் கவியரசன் புதுச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை