×

மணமேல்குடி பகுதியில் சூறை காற்றால் மீனவர்கள் பணி பாதிப்பு

மணமேல்குடி, ஜூன் 11: மணமேல்குடி கடலோர பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் புழுதி மணல் பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துள்ளாகின்றனர். மேலும் தென்னைமரங்கள் முழுவதும் பலத்த காற்றினால் வேகமாக ஆடி தேங்காய்கள் மரத்திலிருந்து விழுகிறது. கடலில் சூறைக்காற்று வீசுவதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகளை கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Fisherman ,area ,Manamkuldi ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...