×

போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது மணமேல்குடியில் பறவைகள் வேட்டையாடிய 2 பேர் கைது

மணமேல்குடி, ஜூன் 11: மணமேல்குடி பகுதியில் மணமேல்குடியில் பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மணமேல்குடி அடுத்த வடக்கம்மாபட்டிணம் பகுதியில் பறவைகள் வலை வீசி பிடிப்பதாக வந்த தகவலின் பேரில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும சப் இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், ராஜ்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு பறவைகள் பிடித்துக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட பறவைகளை கைப்பற்றி கோடியக்கரை காட்டுப்பகுதியில் விட்டனர். மேலும் 2 பேரையும் இனிமேல் பறவைகள் பிடிக்கக் கூடாது என கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED புதுகை, பரம்பூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை