×

பைக் மீது லாரிய மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி மெக்கானிக் பலி

ஜெயங்கொண்டம், ஜூன் 11: பைக் மீது லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி டூவீலர் மெக்கானிக் பலியானார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் சதீஷ் (22). டூவீலர் மெக்கானிக். இவரும் இவரது நண்பர்களான சின்னவளையத்தை சேர்ந்த பாலமுருகன் (22), குருவாலப்பர்கோவில் வடக்கு தெருவை சேர்ந்தபிரபாகரன் (22) ஆகியோர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக ஒரே பைக்கில் சென்றனர்.

திருச்சி- சிதம்பரம் ரோட்டில் புதுச்சாவடி அருகே ஜெயங்கொண்டத்தில் இருந்து குறுக்குரோடு நோக்கி சென்ற லாரியை முந்த முயன்றனர். அப்போது பைக் மீது லாரி மோதியது. இதில் பாலமுருகன், சதீஷ், பிரபாகரன் ஆகியோர் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சதீஷ், பாலமுருகன் ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சதீஷ் இறந்தார்.
கள்ளமார்க்கெட்டில் மதுபாட்டில் விற்பதை தடை செய்ய வேண்டும்

Tags : Mexican ,mechanic accident ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்