சீர்காழி, ஜூன் 11:சீர்காழி அருகே பட்டதாரி இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீர்காழி அருகே நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் ராஜ் (21). பிஇ முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜ் பைக்கில் சீர்காழி வந்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சித்தன் காத்திருப்பு என்ற இடத்தில் தலையில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார். இதனை தொடர்ந்து திருவெண்காடு போலீசார் ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜ் பைக்கில் வேகமாக சென்று விபத்துக்குள்ளாகி பிறந்தாரா அல்லது யாராவது தாக்கியதில் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.