×

அவசர கூட்டத்தில் முடிவு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 11: மயிலாடுதுறையில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியர்களு அடையாள அடடை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு 350 ரூபாய் பிடித்தம் செய்வதை குறைத்திட வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் பக்கிரிசாமி உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Tags : Demonstration ,emergency meeting ,cancellation ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்