×

பக்தர்கள் கோரிக்கை காரைக்காலில் 10 கோயில்களின் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்

காரைக்கால், ஜூன் 11: காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த 10 கோயில்களின் உண்டியல் எண்ணும் பணி நேற்று தொடங்கியது. காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்திற்கு சொந்தமான சித்தி விநாயகர், பொய்யாத மூர்த்தி விநாயகர், அண்ணாமலை ஈஸ்வரர் ஆலயம், கடைத்தெரு மகாமாரியம்மன் ஆலயம், காரைக்கால் அம்மையார் கோயில், நித்யகல்யாண பெருமாள் கோயில், சோமநாதர் ஆலயம், கைலாசநாதர் கோயில், அய்யனார் ஆலயம் ஆகிய பத்து கோயில்கள் உள்ளது. இக்கோயில்களின் உண்டியல் எண்ணும் பணி நேற்று துவங்கியது.

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது உற்சவம் நடைபெற்று முடிந்த காலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் இந்த ஆலய நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களின் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். தற்போது பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவிற்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில், அனைத்து கோயில்களின் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொள்வது என அறங்காவலர் வாரியம் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
இதனையடுத்து காரைக்கால் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து இதற்கான பணி ஆணை பெற்று நேற்று காலை உண்டியல் திறக்கப்பட்டு அதில் உள்ள தொகை எண்ணும் பணி தொடங்கியது.

இந்தப்பணி அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி. பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. பணியில் சுமார் 30 அரசுத்துறை ஊழியர்களும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். வசூலான தொகை ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் உடனே வங்கியில் செலுத்தப்பட்டது. ரெங்கநாதபெருமாள் கோயில் திருமயிலாடி சுந்தரேஸ்வரர், திருக்கருகாவூர் சிவன் கோயில், திருமுல்லைவாசலில் உள்ள முல்லைவனநாதர் கோயில் மகேந்திரப்பள்ளியில் உள்ள திருமேனியழகர் மற்றும் விஜயகோதண்டராமர் கோயில் ஆகியவைகள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததாகவும்

Tags : pilgrims ,temples ,Karaikal ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு