×

நாகையில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

நாகை, ஜூன்11: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நாகையில் நேற்று நடந்தது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கிழக்கு கடற்கரை சாலையில் நிறைவு பெற்றது. இதில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், மண்வளம் காப்பது ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர். டிஆர்ஓ இந்திமதி, தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் வேலுமணி, தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Awareness Campaign ,World Environment Day ,
× RELATED சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு மரக்கன்று