×

காரியாபட்டி 5வது வார்டில் குடிநீர் மோட்டார் அறை சேதம்

காரியாபட்டி, ஜூன் 11: காரியாபட்டி 5வது வார்டில் குடிநீர் மோட்டார் உள்ள அறை சேதமடைந்திருப்பதால், ஊழியர் அச்சத்துடன் சென்று வருகிறார். காரியாபட்டி பேரூராட்சி 5வது வார்டில் குடிநீர் மோட்டார் அறை உள்ளது.  இந்த அறையில் போர்வெல் மோட்டாரும், அதற்கான சுவிட்ச் போர்டும் உள்ளது. இந்நிலையில், அறை கட்டிடத்தின் மேற்கூரையில், சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. 5வது வார்டுக்கு மோட்டாரை இயக்கச் செல்லும் ஊழியர் உயிர் அச்சத்தில் சென்று வருகிறார். இந்த அறையை அடுத்த யூனியன் அலுவலகத்தின் பின்புறமும் பொதுமக்கள், குழந்தைகள் அதிகமாக நடமாடும் பகுதி உள்ளது. இந்த அறையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், 5வது வார்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் வழங்க, மேல்நிலை நீர்தேக்க தொட்டி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இல்லாததால், போர்வெல் மூலம் தெருக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர். மின் மோட்டார்கள் பழுதாகும் நேரங்களில், தெருக்களில் தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், இந்த வார்டில் உள்ள குடிநீர் தொட்டியும் பழுதாகியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...