×

பாம்பு கடித்து பெண் பலி

திருச்சுழி, ஜூன் 11: நரிக்குடி அருகே, பாம்பு கடித்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நரிக்குடி அருகே, உச்சனேந்தலைச் சேர்ந்தவர் மணி மனைவி பொன்னம்மாள் (58). இவர், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிற்கு முன்பாக வாசல் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் தொட்டி அருகே  மறைந்திருந்த பாம்பு, அவரை கடித்தது. இதில், மயக்கமடைந்த பொன்னம்மாளை  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு உயிரிழந்தார். இது குறித்து கட்டனூர்  போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி