×

மாணவ, மாணவியர் தவிப்பு கோயில் திருவிழாவில் போலீசாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

திருச்சுழி, ஜூன் 11: நரிக்குடி அருகே, கோயில் திருவிழாவில், போதையில் போலீசாரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நரிக்குடி அருகே, முடுக்கன்குளத்தில் அய்யனார் கோயில்  திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள  மதுரையைச் சேர்ந்த ரமேஷ் (29), கணேஷ் (38), ராமசந்திரன் (31),  ராமநாதபுரம் பழனி (39) ஆகியோர் வந்தனர். இவர்கள் மதுபோதையில் மீனாட்சிபுரம் விலக்கில் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து வீரசோழன் சென்ற  தனியார் பஸ்சை செல்ல விடாமல் தடுத்தனர். தகவலறிந்து வந்த  அ.முக்குளம் போலீசார் தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் அப்புறப்படுத்த  முயன்றனர். ஆத்திரமடைந்த 4 ேபரும் ேபாலீசாரை சரமாரியாக தாக்கினர்.  இதில், போலீசார் காயமடைந்தனர். தனியார் பஸ் கண்டக்டர் கொடுத்த  புகாரின்பேரில், ரமேஷ் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...