தேனி, ஜூன் 11: தேனி பழைய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் திருப்பதி(44). மரக்கடையில் வேலை பார்க்கும் இவர், குடிப்பழக்கம் உள்ளவர். அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. திருப்பதியின் தொல்லையால் மனம் வெறுத்த அவரது மனைவி பக்கத்து தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்று விட்டார். நேற்று மாலை மனைவியை தேடி மாமியார் வீட்டிற்கு சென்றார். ஆனால், மனைவி அவரை துரத்தி விட்டார். இதனால் மனம் வெறுத்த திருப்பதி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு டூவீலரில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து தீக்குளிக்க முயன்றார். நேரு சிலை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் முத்துக்கிருஷ்ணன், உடனே சென்று திருப்பதியை பிடித்தார். அவரின் புகாரின் பேரில் திருப்பதியை தேனி போலீசார் கைது செய்தனர்.