×

மூணாறு அருகே ஆன்லைன் மோசடி சின்னமனூர் அருகே சிதைந்து கிடக்கும் தடுப்பணை

சின்னமனூர், ஜூன் 11: சின்னமனூர் அருகே முதல் போகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன் மார்க்கையன்கோட்டை தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் அருகே  எல்லப்பட்டியில் முல்லைப் பெரியாற்றுக்குள் மார்க்கையன்கோட்டை தடுப்பணை உள்ளது.  இந்த  தடுப்பணையில் கருங்கற்கள் பெயர்ந்து பெரும் பள்ளங்களாக காட்சியளிக்கிறது. தண்ணீர் வரும் போது யாராவது இறங்கினால் பள்ளத்திற்குள் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே, முதல் போகத்திற்கு தண்ணீர் திறப்பதற்குள் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முல்லைப்பெரியாற்று அணை நீர்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை இல்லாததால் நீர் மட்டம் உயராமல் உள்ளது. வழக்கமாக கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக நெல் சாகுபடிக்கு ஜூன் ஒன்றாம் தேதியில் திறக்கப்படுகின்ற தண்ணீர் திறக்க வழியில்லாமல் உள்ளது. எனவே, தற்போது வறண்டு கிடக்கும் நிலையில் தடுப்பணையை உடனே சீரமைக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : Chinnamanur ,Munnar ,
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி