×

கரூர் தாளப்பட்டியில் பராமரிப்பின்றி சிமெண்ட் காரை பெயர்ந்த வாய்க்கால் பாலம்

கரூர், ஜூன் 11: தாளப்பட்டி வாய்க்கால் பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் அருகே உள்ள தாளப்பட்டியில் மிகவும் பழமைவாய்ந்த வாய்க்கால் பாலம் உள்ளது. கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த வாய்க்கால் பாலத்தில் சிமெண்ட் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் பாலம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. சிமெண்ட் காரைகள் பெயர்ந்து வருகிறது. எனவே வாய்க்கால் பாலத்தை சீரமைத்து மழைநீரை சேமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : bridge ,Karur Thalapatti ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...