×

உணவை தேடி அலையும் நாரைகள் நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தாததால் கிருஷ்ணராயபுரம் பகுதியில் வறண்டு கிடக்கும் குளங்கள்

கரூர், ஜூன் 11: நதிநீர் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்தாதால் குளங்கள் வறண்டு கிடக்கின்றன, கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மழை அளவு குறைவாகவே உள்ளது. அவ்வப்போது பருவமழை பெய்தாலும் கடந்த ஆண்டுகளைப்போல சென்டிமீட்டர் அளவில் மழையில்லை. மிமீ அளவுக்கே மழைப்பொழிவு உள்ளது. கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளத்தில் பாசனக்குளம் உள்ளது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் நீரின்றி வறண்டு வருகிறது. சேங்கல், முனையனூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தால் இந்த குளத்திற்கு நீர்வரும். குளம் நிரம்பினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகளுக்கு நீர்சென்று ஆயிரக்கணக்கான ஏக்கர் பயனடையும். இந்தகுளம் நிரம்பினால் மட்டுமே அருகில் உள்ள நிலங்களுக்கு பாசனநீர் கிடைக்கும். கடந்த 6மாதத்திற்கு முன்னர் காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

எனினும் அந்த நீரை குளத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காததால் பயனில்லாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு 2லட்சம் கன அடிக்குமேல் காவிரியாற்றில் தண்ணீர் வந்தும் எங்களுக்கு பயனில்லை. தற்போது பருவ மழை இல்லாததால் பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். உள்ளூர் நதிநீர் இணைப்புத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மழையும் இல்லை. ஆறுகள்இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே வெள்ளகாலங்களில் காவிரிநீர் வீணாகாமல் தடுக்கப்படும். கோவக்குளம் மட்டுமின்றி பல குளங்கள் இத்திட்டத்தினால் பயனடையும். மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டம் இது. மாநில அரசிடம் நிதியில்லை என்கின்றனர். மத்தியஅரசும் நிதி தராமல் உள்ளது. மத்தியஅரசிடம் நிதியைப்பெற்று கிடப்பில் கிடக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே உபரிநீர் குளத்திற்கு வரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Krishnarayapuram ,
× RELATED போக்குவரத்திற்கு இடையூறாக கொடி கம்பம் நட்ட நாதக மீது வழக்கு பதிவு