×

ஆலோசனை கூட்டத்தில் முடிவு கரூர் அருகே ஏமூர்புதூர் சாலையில் கோழிக்கழிவுகள் கொட்டுவதால் சுகாதார கேடு

கரூர், ஜூன் 11: சாலையில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. கரூர் அருகே உள்ள ஏமூர்புதூர் சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் கோழிக்கடைகளில் இருந்து கோழி இறைச்சிக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் கோழி இறைச்சி விற்பனையாகிறது. இதற்காக ஆங்காங்கே கடைகளை போட்டு கோழிகளை உரித்து விற்பனை செய்கின்றனர். கடைசியில் கழிவுகளை மூட்டையாக கொண்டு வந்து ஏமூர் சாலையில் கொட்டி விட்டு போய் விடுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. சுகாதார கேடு ஏற்படும் வகையில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : consultation meeting ,road ,Eumuputur ,Karur ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...