×

கரூரில் சிறப்பாக தேர்தல் பணி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

கரூர், ஜூன் 11: தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி சான்றிதழ் வழங்கினார். கரூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலின்போது சிறப்பாக தேர்தல் பணியினை மேற்கொண்ட காவல் அதிகாரிகள், போலீசாரை பாராட்டி கரூர் மாவட்ட எஸ்பி விக்ரமன் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பரிசு, சான்றிதழ் வழங்கினார். இதுபோன்று சிறப்பாக பணியாற்றியவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என அவர் கூறினார். கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்பி பாரதி மற்றம் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : Karur ,police officers ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...