×

போக்சோ சட்டத்தில் அண்ணன், தம்பி கைது

சிங்கம்புணரி, ஜூன் 11:  சிங்கம்புணரி அருகே போக்சோ சட்டத்தின்கீழ் அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர். சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் திருமலைகுடியை சேர்ந்தவர் செல்வம் மகன் அரவிந்தன். இவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் மைனர் பெண் மற்றும் அரவிந்தன் கேரளாவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு வந்தனர். இதுகுறித்து புழுதிப்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை கடத்தியதாக அரவிந்தன் மற்றும் கடத்துவதற்கு உடந்தையாக இருந்ததாக அரவிந்தன் தம்பி அருண்பாண்டி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags : brother ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...