தொண்டி, ஜூன் 11: தொண்டி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பைக் ரேஸ் விபத்தில் ஒருவர் பலியானார். இந்நிலையில் பலத்த காயம் அடைந்தவர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். தொண்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது யாசின்(19). இதே பகுதியை சேர்ந்த முகம்மது சேக் அப்துல்லா (19) ஆகியோர் கடந்த 2ம் தேதி இரவு தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பைக்ரேஸில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பெருமானேந்தல் வளைவில் நிலை தடுமாறி டூவீலர்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே முகம்மது யாசின் பலியானார். பலத்த காயம் அடைந்த முகம்மது சேக் அப்துல்லா, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் இறந்தார்.