×

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 11:  ஆர்.எஸ்.மங்கலத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை அமைப்பின் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்,மங்கலத்தில் மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டது. மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மக்கள் பாதை தன்னார்வலர்கள் ஆசிரியர் பாதுஷா, சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறுவர்கள் சிலர் மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க உறுதி எடுத்தனர். மரக்கன்றுகளை வைத்து பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள், இளைஞர்களுக்கும் மரம் வளர்பின் அவசியம் குறித்து எடுத்து கூறி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வைத்து வளர்த்து பயன் பெற வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags : Festival ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...