×

தெருவிளக்கு எரிந்து மூன்று ஆண்டு ஆகிறது கலெக்டரிடம் புகார்

ராமநாதபுரம், ஜூன் 11:  ராமநாதபுரம் அருகே புதுமடம் கிராமத்தில் சீரான மின்சாரம் கிடைக்கவில்லை என கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். புதுமடம் தெற்கு நற்பணி மன்றத்தின் சார்பில் அளித்துள்ள மனுவில், புதுமடத்தில் கடந்த சில மாதங்களாக சீரான வகையில் மின்சாரம் கிடைக்கவில்லை. பகல் இரவு என எந்த நேரத்திலும் குறைந்த அளவிலான மின்சாரம் வருகிறது. இதனால் வீட்டில் உள்ள மின் சாதனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. புதுமடம் தெற்கு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே புதிதாக வைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து விட்டது. எங்கள் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேலான மின் இணைப்புகள் உள்ளதால் புதிய துணை மின்நிலையம் அமைத்து சீரான மின்சாரம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் புதுமடம் தெற்குகடற்கரை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தெருவிளக்கு எரியவில்லை என  கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...