×

கலெக்டரிடம் புகார் வடக்கு தாலுகாவில் நாளை ஜமாபந்தி

மதுரை, ஜூன் 11: மதுரை மாவட்டத்தில் நாளை முதல் வருவாய் தீர்வாயமான ஜமாபந்தி துவங்குகிறது. மதுரை வடக்கு தாலுகாவில், மதுரை ஆர்டிஓ முருகானந்தம் தலைமை வகித்து ஜமாபந்தியை நடத்துகிறார். இதற்காக விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற உள்ளார்.

இதுகுறித்து மதுரை வடக்கு தாலுகா தாசில்தார் செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இந்தாண்டுக்கான ஜமாபந்தி ஜூன் 12ல் கூளப்பாண்டி உள்வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும், 13ம் தேதி சத்திரப்பட்டி உள்வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும், 14ம் தேதி சமயநல்லூர் உள்வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் நடக்கிறது. 18ம் தேதி குலமங்கலம் உள்வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும், 19ம் தேதி சாத்தமங்கலம் உள்வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

Tags : Northern Taluka ,
× RELATED வடக்கு தாலுகா அலுவலகத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி