×

பிளஸ்2 மாணவி கடத்தல்

வாழப்பாடி, ஜூன் 11:வாழப்பாடி அருகே உள்ள கொட்டவாடி ஊராட்சியை சேர்ந்த பிளஸ்2 மாணவி, நேற்று வாழப்பாடியில் உள்ள பள்ளிக்கு சென்றார். பள்ளி முடிந்து மாலையாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், ஏத்தாப்பூர் போலீசில் புகார் செய்தனர். புகாரில், மாணவியை கொட்டவாடியை சேர்ந்த கட்டிட வேலை பார்த்து வரும் ரஞ்சித்(30) என்ற வாலிபர் கடத்தி சென்றதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ரஞ்சித்துக்கு ஏற்கனவே திருமணமாகி  மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்