×

ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதியில் கள்ளக்குறிச்சி எம்பி நன்றி தெரிவிப்பு கூட்டம்

சேலம், ஜூன் 11: சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா விடுத்துள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்பி பொன்.கௌதமசிகாமணி, இன்றும், நாளையும் என இருநாட்கள் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். இதன்படி இன்று (11ம் தேதி) ஆத்தூர் நகரில் காந்திசிலை முன் தொடங்கி, 60 அடி ரோடு, ராஜாஜி காலனி, ஜோதிநகர், 29, 30வது வார்டு, வஉசி நகர், கடைவீதி, அவ்வையார் தெரு, கோட்டை, அருணகிரிநாதர்தெரு, பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும், நரசிங்கபுரம் நகரில் மாலையில் திரவுபதிஅம்மன் கோயில் அருகில் இருந்து உடையம்பட்டிநாடார்தெரு, தில்லைநகர், பழைய வீட்டு வசதி வாரியம், புதிய வீட்டு வசதி வாரியம், விநாயகபுரம், நோதாஜிநகர், சின்னப்பன்நகர் பகுதிகளில் நன்றி கூறுகிறார்.

நாளை (12ம் தேதி) பெத்தநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட கருமந்துறை வடக்குநாடு, தெற்கு நாடு, பகடுபட்டு, மேல்நாடு சூலாங்குறிச்சி, கீழ்நாடு குன்னூர், பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், வெள்ளாளப்பட்டி, தாண்டானூர், கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் பேரூர், மேட்டுடையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு எம்பி நன்றி தெரிவிக்கிறார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வீரபாண்டி ராஜா கூறியுள்ளார்.

Tags : Kallakurichi MB ,meeting ,area ,Narurangapuram ,Attur ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...