×

சேந்தமங்கலத்தில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

சேந்தமங்கலம், ஜூன் 11: சேந்தமங்கலம் அருகே ஜங்களாபுரம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பன்றி வியாபாரி மணிகண்டன்(23) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் திடீரென மாயமானார்கள். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது, இளம்பெண்ணின் பெற்றோர் தங்களது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இந்நிலையில், அந்த இளம்பெண் மணிகண்டனுடன் போலீஸ் நிலையம் வந்தார். இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : love couple ,Senthamangalam ,
× RELATED சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்