×

திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 11: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் யுவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் சேகர், செல்வராஜ்,  மாவட்ட பொருளாளர் குமார், தலைமை  செயற்குழு உறுப்பினர்  செழியன்,  பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், செல்வராஜ், அம்பிகா, பரமானந்தம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பிரிவில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் இருந்து, சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொள்வது என முடிவானது. மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியின் பொறுப்பாளர்கள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு, தகுதியான வேட்பாளர்களை இனம் கண்டு தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ பேசினார். கூட்டத்தில் கார்த்திகேயன், வெங்கடேசன், ரவிச்சந்திரன், வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் தங்கவேல், சண்முகம், சண்முகம், தனராசு, செல்வராஜ், பழனிவேல், ரமேஷ்பாபு, மணிமாரப்பன், கருணாநிதி, ராமலிங்கம், மகாமுனி, சிவக்குமார், திருமலை, மதுரா செந்தில்,  ராஜமாணிக்கம், பூங்கோதை செல்லதுரை, கராத்தே சரவணன், ரங்கசாமி  உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் குமார் நன்றி கூறினார்.

Tags : DMK ,meeting ,Tiruchengode ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு