×

போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் குடிநீர் தொட்டி

போச்சம்பள்ளி, ஜூன் 11:  போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் தாகத்தை போக்க குடிநீர் தொட்டி அமைப்பது என வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போச்சம்பள்ளியில் அனைத்து வணிகர் சங்க கூட்டம் நடைபெற்றது. தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கேசவன் கலந்து கொண்டு பேசினார். போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் மற்றும் மக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள அனைத்து கடைக்காரர்களும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை அறவே நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவராஜனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி தெரிவித்தனர். முன்னதாக செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.

Tags : bus stand ,Pochampally ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை