×

படேதலாவ் ஏரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 11: பர்கூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டாக்டர். செல்லகுமார் எம்பி., படேதலாவ் ஏரி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கலெக்டரிடம் பேசி, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.செல்லகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் பர்கூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஒரப்பம், மருதேப்பள்ளி, பாலிநாயனப்பள்ளி, எலத்தகிரி, கந்திகுப்பம், வரட்டனப்பள்ளி, பெலவர்த்தி, சின்னமட்டாரப்பள்ளி, பசவண்ணகோவில், குருவிநாயனப்பள்ளி, காளிக்கோவில், ஓதிகுப்பம், சிந்தகம்பள்ளி, காரகுப்பம், எமக்கல்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘விரைவில் படேதலாவ் ஏரி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கலெக்டரிடம் பேசி, அதற்கான நடவடிக்கை மேற்கொள்வேன். மிக விரைவில் கிருஷ்ணகிரியில் நாடாளுமன்ற தொகுதிக்கான அலுவலகம் திறக்கப்படும். அதில் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கள் கோரிக்கையினை மனுக்களாக கொடுத்தோ, நான் இருக்கும் போது நேரில் கூறலாம். அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அதை நிறைவேற்ற பாடுபடுவேன்,’ என்றார்.

அவருடன் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுவிக்கின், வெங்கடேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நாகராஜ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட துணைத்தலைவர் சேகர், வக்கீல் அசோகன், வட்டார தலைவர் ஜாக்கப், மாவட்ட பிரதிநிதி ஆரோக்கியசாமி, நஞ்சுண்டன், ஜெயப்பிரகாஷ், யாதவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு