×

தனியார் மருத்துவமனை முற்றுகை

தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தேவரத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன்(35). இவரது மனைவி பிரவீணா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள ஆனந்தனுக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஆனந்தனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை ஒட்டப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அப்போது, மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், சிறிது நேரத்தில் ஆனந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அறிந்த உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டு முற்றுகையிட்டனர். அப்போது, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான், ஆனந்தன் உயிரிழந்து விட்டதாக கூறி அங்கிருந்த செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடம் வந்த அதியமான்கோட்டை போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இதுகுறித்து பிரவீணா அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், தனது கணவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால்தான், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Hospital Siege ,
× RELATED கன்னியாகுமரி அருகே கர்பிணிப்...