×

பயணியிடம் ஜேப்படி கர்நாடக வாலிபர் கைது

ஓசூர், ஜூன் 11:  சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பொம்மிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(48). கூலி தொழிலாளியான இவர், சொந்த வேலைக்காக ஓசூர் வந்திருந்தார். பின்னர், பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ₹500 பணத்தை ஜேப்படி செய்து தப்பி ஓட முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் சீனிவாஸ்(33), கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Jatin ,Karnataka ,
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...